/* */

இட்லி, பூரி சுட்டு வாக்கு சேகரித்த தங்கதமிழ்செல்வன்

இட்லி, பூரி சுட்டு வாக்கு சேகரித்த தங்கதமிழ்செல்வன்
X

தேனியில் ஹோட்டலில் இட்லி, பூரி சுட்டு திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் நட்சத்திர தொகுதியான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பதோடு மட்டுமல்லாது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்தும் வாக்கு சேகரிப்பில் அசத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலைல் போடி பெருமாள் கோவில் தெரு, கீழத்தெரு அம்மாகுளம் உள்ளிட்ட இடங்களில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இதனிடையே அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சென்று உணவு தயார் செய்யும் தொழிலாளி உடன் இணைந்து இட்லி, பூரி சுட்டு உணவு தயார் செய்து வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 March 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...