Begin typing your search above and press return to search.
தேனியில் இபிஎஸ் உருவபொம்மை எரிக்க முயற்சி: தடுத்து நிறுத்திய போலீசார்
தேனியில் இபிஎஸ் உருவபொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்து நிறுத்திய போலீசார்.
HIGHLIGHTS
தேனியில் இபிஎஸ் உருவபொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்து நிறுத்திய போலீசார்.
அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியது, கார் டயர் பஞ்சராக்கியதை கண்டித்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நேரு சிலை முன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். இதனைக் கண்ட அப்பகுதி காவல்துறையினர், தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை பறித்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இபிஎஸ் உருவபொம்மையை எரிக்க முயன்ற நபர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து யார் மீதும் வழக்குப் பதிவு எதுவும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.