/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
X

கம்ப்யூட்டர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி தேனியில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2021 நடைபெறவுள்ளதையொட்டி, சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி தேனி மாவட்ட கலெக்டர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (5 ம் தேதி) நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,561 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,875 கட்டுப்பாட்டு கருவியும், 1,875 வாக்குப்பதிவு இயந்திரங்களும் , மற்றும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதி செய்யும் கருவியான 2,000 விவிபேட் இயந்திரங்களும் என மொத்தம் 5,750 கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது போக கூடுதல் இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வின் போது, டிஆர்ஓ ரமேஷ், ஒருங்கிணைப்பு அலுவலர் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்) தியாகராஜன், பெரியகுளம் சப்கலெக்டர் சிநேகா, அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்