/* */

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு
X

Naam Tamilar Party coordinator Seeman, police have registered a case- நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (கோப்பு படம்)

Naam Tamilar Party coordinator Seeman, police have registered a case- மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலானது.

அவர் பேசுகையில், "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்ல என்றார். தொடர்ந்து சீமான் பேசுகையில், கிறிஸ்தவம், இஸ்லாமியம் குறித்து, சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண், "இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையை விட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம். இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, சிலர் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனத் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.

நடிகர் ராஜ்கிரண் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "அவர் வயதில் பெரியவர், நான் மதத்தை பற்றிப் பேசிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் என்னுடைய முழு பேச்சை கேட்டாரா எனத் தெரியவில்லை. சிறிய காணொளியை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்கக் கூடாது. அவருக்கு என்னை திட்டுவதற்கோ, கோபப்படுவதற்கோ உரிமை இருக்கிறது" என்றார். இதையடுத்து நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை குறிப்பிட்டுப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் பெரும்பான்மை, சிறுபான்மை குறித்தும் சீமான் சில விளக்கங்களை கூறியிருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து, கடந்த ஜூலை 30 -ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியதாகக் கூறி, திராவிட நட்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 8 Aug 2023 4:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...