Begin typing your search above and press return to search.
முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார்.
அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி நபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தன்னிடம் அளித்த 22 இலட்சத்து 69 ஆயிரத்து 51 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.