/* */

புளியங்குடியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

புளியங்குடியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

புளியங்குடியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா  கொண்டாட்டம்
X

பெண் காவலர் உறியை அடிக்க முயன்ற போது எடுத்த படம்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டும், மகளிர் தின விழாவினை முன்னிட்டும் பெண்களுக்கான கோலப்போட்டி, உரி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு வகையாக கலர் கோலங்கள் வரைந்த சூழலில் சிறப்பாக வரையப்பட்ட கோலங்களுக்கு பரிசு தொகை வழங்கப்பப்பட்டது. தொடர்ந்து, பெண்களுக்கான உரியடி போட்டி நடைபெற்ற சூழலில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களும் உறியடிக்க முயற்சி செய்தனர்.

ஆனால், எந்த பெண்களும் உரிப்பானையை உடைக்க முடியாத காரணத்தினால், இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர் ஒருவர் தானும் ஒரு பெண்தான் எனக் கூறியபடி, கண்ணில் துணியை கட்டி உரியை அடிக்க முயற்சி செய்தார். அப்பொழுது ஒரே முயற்சியில் உரிப்பானையை அடித்து நொறுக்கினார்.

இதை பார்த்த சக பெண்கள் மட்டும் கூடியிருந்தவர்கள் பெண் காவலரை பாராட்டியதுடன், பல பெண்கள் முயற்சி செய்தும் உடைக்க முடியாத பானையை ஒரே முயற்சியில் பெண் காவலர் உடைத்தது அனைவரது பாராட்டுகளையும் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Updated On: 21 March 2023 8:14 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு