சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறில் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது
![சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறில் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறில் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது](https://www.nativenews.in/h-upload/2021/09/02/1276503--1.webp)
சங்கரன்கோவில் அருகே நிலத்தகராரில் தாய், மகன் ஆகிய இருவருக்கு அரிவாள் வெட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. முருகன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். அதே பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர்கள் இருவருக்கும் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் சம்பந்தமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று வள்ளியம்மாள் மற்றும் அவருடைய மகன் பாலமுருகன் ஆகியோருக்கும், முருகனுக்கும், விவசாய இடத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியதை தொடர்ந்து ஆத்திரமடைந்த முருகன் வள்ளியம்மாள், அவருடைய மகன் பாலமுருகன் ஆகிய இருவரை சரமாறியாக வெட்டியுள்ளார்.
இதனைதொடர்ந்து இரத்த வெள்ளத்தில் தாய், மகன் கிடந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் வாசுதேவநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது தாய், மகன் உயிருக்கு ஆபாத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தாெடர்பாக முருகன் என்பவரை கைது செய்து வாசுதேவநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu