புளியங்குடியில் நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

புளியங்குடியில் நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்
X

புளியங்குடியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்.

புளியங்குடியில் நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு புளியங்குடி எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கி நடத்தினார். நகரச் செயலாளர் அப்பாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜார்ஜ் மற்றும் புளியங்குடி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர தலைவர் அபுசாலிஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியினுடைய நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நகரப் பொருளாளர் நஸீர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?