பேருந்து பயணியிடம் நகையை திருட முயன்ற பெண் கைது
![பேருந்து பயணியிடம் நகையை திருட முயன்ற பெண் கைது பேருந்து பயணியிடம் நகையை திருட முயன்ற பெண் கைது](https://www.nativenews.in/h-upload/2021/08/29/1269526-chor.webp)
தென்காசி மாவட்டம்,பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலப் பட்டினத்தில் வசித்து வருபவர் தங்கபுஷ்பம் (33). இவர் திருநெல்வேலியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பேருந்தில் பாவூர்சத்திரம் வந்து இறங்கிய போது அவரின் பின்னால் இருந்த பெண் தங்கபுஷ்பத்தின் கையில் வைத்திருந்த பையிலிருந்து தங்க சங்கிலியை திருட முன்றுள்ளார்.
சுதாரித்து கொண்ட தங்கபுஷ்பம் மற்றும் அவரின் உறவினர்கள் சேர்ந்து அப்பெண்ணை கையும் களவுமாக பிடித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் சங்கிலியை திருட முயன்ற பெண் மானாமதுரை சர்க்கஸ் காலனியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி காளியம்மாள்(28) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu