/* */

சுரண்டை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் திடீர் தீ விபத்து

சுரண்டை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

சுரண்டை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் திடீர் தீ விபத்து
X

சுரண்டையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஏற்ப்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினர்.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இரவு சுமார் 9 மணி அளவில் அபாய ஒலி ஒலித்தது. அப்போது அருகில் உள்ள கடைக்காரர்கள் பார்த்தபோது வங்கியினுள் தீ எரிவது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு துறையினரும் மற்றும் சுரண்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தீயணைப்புத்துறையினர் வங்கி உள்ளே சென்று பார்த்த போது மேலாளர் அறை அருகே தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்டது என தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 14 July 2023 2:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  2. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  3. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  4. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  9. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  10. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!