பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
Revenue Department Employees Agitation
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவுவாயில் அருகே வருவாய்த்துறை ஊழியர்களின் உண்ணாவிரதம் போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிர போராட்டமானது நடைபெற்ற நிலையில், காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உண்ணாவிரத போராட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu