சாலைகளை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பட விளக்கம்: சாலைகளை சீரமைக்க கோரி ஆறு கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
6 கிராமங்களில் சேதமடைந்த கிராமப்புற இணைப்பு சாலைகளை சீரமைக்க கோரி . கிராம மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் திப்பணம் பட்டி முதல் அரியப்பபுரம் கிராமம் வரை உள்ள 3 கி.மீட்டர் தூரத்திற்கும், நாட்டார்பட்டி முதல் திரவிய நகர் வரை உள்ள 4 கி.மீட்டர் தூரத்திற்கும் உள்ள சாலைகள் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக சிதிலமடைந்து காணப்படுகிறது.
7 கி.மீட்டர் தூரத்தில் திப்பணம் பட்டி, சென்னெல்தா புதுக்குளம், நாட்டார்பட்டி . பூவனூர், அரியப்பபுரம், திரவியநகர் ஆகிய 6 கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் அரியப்பபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவசர தேவைகளுக்கும், பள்ளி குழந்தைகள் பள்ளி சென்று வருவதற்கும் இந்த சாலைகளை பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதாக கூறி 6 கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினரும் இணைந்து பாவூர்சத்திரம் - கடையம் சாலையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திப்பணம் பட்டி முதல் அரியப்பபுரம், நாட்டார்பட்டி முதல் திரவிய நகர் வரை உள்ள சேதமடைந்த கிராமப்புற இணைப்பு சாலைகளை பராமரித்து புதிய சாலைகள் அமைக்கோரியும், சேதமடைந்த சாலைகளை பராமரிக்காத அரசு கிராமப்புற நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்தும், போர்க்கால் அடிப்படையில் சாலைகளை பராமரிக்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகள் ஒரு வார காலத்தில் நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் போன்று அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu