இலத்தூரில் தேசிய ஆயுர்வேத தின விழா: போலீஸ் எஸ்.பி பங்கேற்பு

தென்காசி மாவட்டம் இலத்தூரில் நடந்த தேசிய ஆயுர்வேத தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தேசிய ஆயுர்வேத தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தென்காசி மற்றும் திருநெல்வேலி அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் சார்பாக இலத்தூர் பாரத் கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட 6வது தேசிய ஆயுர்வேத தின சிறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆயுர்வேத கண்காட்சியை பார்வையிட்டார்.

மேலும் ஆயுர்வேதம் குறித்து பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai automation in agriculture