/* */

மோடி ஹீரோ அல்ல ஜீரோ - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வர்ணனை

மோடி ஹீரோ அல்ல ஜீரோ என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வர்ணனை செய்துள்ளார்.

HIGHLIGHTS

மோடி ஹீரோ அல்ல ஜீரோ - திராவிடர் கழக தலைவர்  கி.வீரமணி வர்ணனை
X

தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி.

கச்சத்தீவு விவகாரத்தில் மோடி ஹீரோ இல்லை எனவும் அவர் ஜீரோவாகவே உள்ளார் என கூறியதோடு, பாஜக தமிழகத்தில் வழக்கம்போல நோட்டாவிடம் மட்டுமே போட்டியிடுவதாக திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியில் அமைந்துள்ள வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைதொடர்ந்து தென்காசி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைந்தால் ஜனநாயகத்தின் நடைபெறும் கடைசி தேர்தலாக அமையும் என்றார்.

கச்சத்தீவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் பத்திர முறைகேடு குறித்த பிரச்சனைகள் எழுப்பி வரும் நிலையில் அதனை திசை திருப்பும் விதமாக பாஜக அரசு கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு குறித்து குற்றம் சாட்ட மோடிக்கு எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது. கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் மோடி ஹீரோவாக இல்லை எனவும் ஜீரோவாக உள்ளார் எனவும் தெரிவித்தார். அந்த வகையில் பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்கும் வேலை என கூறினார்.

மேலும் கச்சத்தீவு விவகாரத்தில் அண்ணாமலை வெளியிடும் ஆதாரங்கள் அனைத்தும் ஆதாரங்கள் இல்லை பொய் சாட்சி சொல்லும் வேலையாக உள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், தழிழகத்தில் வழக்கம்போல பாஜக நோட்டாவுடன் போட்டி போடும் சூழலே உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு மோடி வரும்பொழுதெல்லாம் யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டேன் என பிரச்சாரம் செய்து வருகிறார் அது அவ்வாறு இல்லை எனவும் தங்களைத் தவிர யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டேன் என்பதே உண்மை என தெரிவித்தார்.

Updated On: 3 April 2024 8:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்