/* */

சுரண்டையில் தீயணைப்பு துறையினர் வெள்ளப் பேரிடர் மீட்பு ஒத்திகை

சுரண்டையில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது எப்படி என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.

HIGHLIGHTS

சுரண்டை அருந்தவபிராட்டி குளத்தில் மழை வெள்ள நேரங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது எப்படி என வீகேபுதூர் தாசில்தார் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி வெள்ளம் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது எப்படி என்ற பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி சுரண்டை வீ.கே.புதூர் ரோட்டிலுள்ள அருந்தவபிராட்டி குளத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வீரகேரளம்புதூர் தாசில்தார் பட்டு முத்து முன்னிலை வகித்தார். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வன், நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் சிறப்பு நிலை அலுவலர் ரவீந்திரன், மற்றும் வீரர்கள் மாடசாமி, சமுத்திரபாண்டி, விவேகானந்தன், ராஜேந்திரன், சாமி, பொன்ராஜ் ஆகியோர் வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை கொண்டு தப்பிப்பது எப்படி மற்றும் தீயணைப்பு துறையின் உதவியை பெறுவது அதன் பணிகள் குறித்து விளக்கினர்.

Updated On: 10 Nov 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?