தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு
X

இலஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த்.

தென்காசி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் அலுவலகங்களில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் நகர்புறத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ம் தேதி துவங்கி இன்று (4ம் தேதி) முடிவடைகிறது.

இத்தேர்தலுக்காக மாவட்ட தேர்தல் பார்வையாளராக எச்.எஸ்.ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று இலஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வேட்புமனு தாக்கல் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் வேட்புமனு தாக்கல் குறித்தும், வாக்குச்சாவடி அமைவது குறித்து இலஞ்சி பேரூராட்சி அதிகாரி அமானுல்லாவிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறும் பகுதிகளை தேர்தல் பார்வையாளர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் பார்வையிட்டார்.

Tags

Next Story
ai solutions for small business