தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

X
By - V.Nagarajan, News Editor |25 Aug 2021 7:57 AM IST
தென்காசி, வீரகேரளம்புதூர், கடையநல்லூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீசியன், வயர் மேன், டீசல் மெக்கானிக், வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்போது நேரடி சேர்க்கை வரும் 28ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை நடக்கிறது.
நேரடி சேர்க்கைக்கு வரும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.50 ஆன்லைனில்செலுத்த வேண்டும். டி.சி.,மார்க்சீட், ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், 2 போட்டோகொண்டு வர வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித் தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. நேரடி சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே நிரப்பபடும் என தென்காசி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu