/* */

தென்காசியில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி காெராேனா விழிப்புணர்வு

மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி

HIGHLIGHTS

தென்காசியில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி காெராேனா விழிப்புணர்வு
X

தென்காசியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கினார்.

மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி.

தமிழக அரசு கொரோணா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்பாக வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் முக கவசம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில் காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் முக கவசம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வணிக வளாகங்கள், பேரூந்து நிலையங்கள் போன்ற இடங்களில் கூட்டம் அதிகம் கூடாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூட்டம் கூடும் இடங்களில் அதிகமான அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் தீவிர கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Updated On: 6 Jan 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்