/* */

சிஎஸ்ஐ தேர்தல்: புதுச்சுரண்டை சேகரத்தில் டிஎஸ் அணி வெற்றி

சிஎஸ்ஐ தேர்தல்: புதுச்சுரண்டை சேகரத்தில் டிஎஸ் அணி  வெற்றி
X

சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதிகள் பால் வசந்த குமார் மற்றும் ஜோதிமணி ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது. பிரதம பேராயரின் ஆணையாளர் திருச்சி பேராயர் சந்திரசேகரன், மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ரத்தினராஜ், ஏடிஎஸ்பி ஜெயசந்திரன் ஆகியோர் தேர்தலை நடத்தினர். இதில் வடக்கு சேகர மன்றம் புதுச்சுரண்டை சேகரத்தில் தேர்தல் அலுவலராக ரெவ‌ டிகே ஸ்டீபன், தேர்தல் பார்வையாளராக வக்கீல் விக்டர் ஆகியோர் பணியாற்றினர். இதில் டிஎஸ் அணி சார்பில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிட்ட அன்னப்பிரகாசம் மற்றும் விக்டர் ராஜகுமார் ஆகியோர் 235 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றனர்.

சேகர மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு பாலச்சந்திரன், தினகரன். ஜேக்கப்.ஜேம்ஸ் அழகுராஜா. ஜெயசந்திரன. பி.பால்ராஜ். எஸ்‌ பால்ராஜ். ஸ்டீபன் ஜெபராஜா. சுதர்சிங் ராஜதுரை. டென்சிங் வைத்தியராஜன். தனபால் ராஜசேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை சேகர சபை மக்கள் வாழ்த்தினர்.

Updated On: 8 Feb 2021 5:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?