/* */

தென்காசியில் காப்பீடு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் காப்பீடு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

தென்காசியில் மத்தியஅரசை கண்டித்து காப்பீடு கழக ஊழியர்கள் மதிய உணவு இடைவேளை இன்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்று இந்தியா முழுவதும் மத்திய அரசை கண்டித்து காப்பீடு கழக ஊழியர்கள் மதிய உணவு இடைவேளை இன்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசியில் உள்ள காப்பீடு கழக அலுவலகம் முன்பு காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் பேச்சிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசின் பட்ஜெட்டில் காப்பீடு கழக பங்குகள் மற்றும் பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியதை கண்டித்தும், மின்சார வாரியம், விமான துறைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 2 Feb 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்