/* */

கரிவலம் வந்தநல்லூர் அருகே கோழிப்பண்ணையில் திருடிய வாலிபர் கைது

கரிவலம் வந்தநல்லூர் அருகே கோழிப்பண்ணையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கரிவலம் வந்தநல்லூர் அருகே கோழிப்பண்ணையில் திருடிய வாலிபர் கைது
X

கோழிப்பண்ணையில் திருடிய வாலிபர் 

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கோமதி முத்துபுரத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் ஜேக்கப் ஜெயக்குமார்(42). இவர் கரிவலம் வந்தநல்லூர் அருகே, கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது கோழிப்பண்ணையில் அடிக்கடி கோழிகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், ஒரு வாலிபர் கோழி திருடியதை கண்ட ஊழியர்கள், அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் திருடிய வாலிபர் சங்கரன்கோவில் என்.ஜி.ஒ காலனியை சேர்ந்த சங்கர் மகன் ஹரிஹரசுதன்(21) என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஹரசுதனை கைது செய்தனர்.

Updated On: 30 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்