/* */

மலையில் குடியேறி போராட்டம் நடத்துவோம்: சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் ஆவேசம்

அரியூர் மலையடிவாரத்தில் மண் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -கிராம மக்கள் கூட்டத்தில் தீர்மானம்.

HIGHLIGHTS

மலையில் குடியேறி போராட்டம் நடத்துவோம்: சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் ஆவேசம்
X

சங்கரன்கோவில் அருகே அரியூர் மலையடிவாரத்தில் மண் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்தனர். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மலையில் குடியேறி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட இருமன்குளம் கிராமத்தில் வடபுறம் உள்ளது அரியூர் மலை இந்த மலையில் பெய்த மழையினால் நான்கு குளங்களினால் ஆயிரகணக்கான விவசாய நிலங்கள் உட்பட எட்டு கிராம மக்களின் வாழ்வாதாரம் இந்த அரியூர் மலையினால் பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது அப்பகுதியில் சேம்பர் வைத்திருக்கும் தனிநபர் ஒருவர் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களை விளைக்கு வாங்கி கல்குவாரி அமைத்து மலையடிவாரத்தில் உள்ள மண் வளங்களை லாரிகள் மூலம் அருகில் உள்ள சேம்பருக்கு கொண்டு செல்கிறார். அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மலைப்பகுதிகளில் கால்நடைகளை மேய்சலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனிம வளக் கொள்ளை சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த இருமன்குளம் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கூட்டம் கூடி கல்குவாரி அமைத்து கனிம வளக்கொள்ளையில் ஈடுபட அனுமதி கொடுத்ததை உடனடியாக இரத்து செய்ய வேண்டும், இல்லை எனில் நாளை மறுநாள் கிராமங்களை காலி செய்து மலையில் குடியேறி போராட்டம் நடத்துவோம் என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 15 Feb 2022 12:14 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  2. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  3. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  4. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  6. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  7. காஞ்சிபுரம்
    லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் தீர்வு: விஏஓ...
  8. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  9. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  10. நாமக்கல்
    டூரிஸ்ட் பர்மிட் பஸ்களை பயணிகள் பஸ்களாக இயக்குவது நியாமற்ற...