/* */

சங்கரன்கோவில் அருகே வயல்களில் கழிவுகள் கொட்டி தீ வைப்பு

கேரளாவில் இருந்துலாரிகளில் கொண்டு வந்து கழிவுகளை கொட்டி தீ வைத்து விட்டுச் சென்றுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே வயல்களில் கொட்டப்பட்ட கேரள மாநில கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரி கிராமம். இக்கிராமங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கிராமத்து வயல் வெளிகளில் கடந்த ஒரு ஆண்டாக கேரளாவிலிருந்து லாரிகளில் மருத்துவக்கழிவுகள், எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. பின்னர் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை . இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக கேரளாவில் இருந்து கழிவு லாரிகளில் கொண்டு வந்து கொட்டி தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் பெரும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

Updated On: 29 Nov 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு