/* */

சங்கரன்கோவிலில் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்ட இருவர் கைது: போலீசார் விசாரணை

சங்கரன்கோவிலில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்ட இருவர் கைது: போலீசார் விசாரணை
X

சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வழிப்பறி ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவிலில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த வருடம் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பறித்து சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சங்கரன்கோவில் நகர காவல்துறை ஆய்வாளர் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் நேற்று சங்கரன்கோவில் பகுதியில் வாகன சோதனையின் போது அவ்வழியாக வந்த மது(24) மற்றும் காஜாமைதீன்(23) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் பெண்ணிடம் இருந்து நகையை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வழிப்பறி ஈடுபட்டு வந்தள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இருவர்களிடம் இருந்து 5 பவுண் தாலி சங்கிலி, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!