/* */

சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற இருவர் கைது

சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற இருவர் கைது
X

கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட இருவர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சென்னை சேர்ந்தவர்கள் என்பதாலும் காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாலும் இருவரும் வந்த 2 சக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது 2 சக்கர வாகனத்தில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் வந்தவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த நாகராஜன் என்பதும், மற்றொருவர் சங்கரன்கோவிலை பூர்வீகமாக கொண்டு தற்போது சென்னையில் வசித்து வரும் காஜா நஸ்முதீன் என்பதும் தெரிய வந்தது.

மேலும் காஜா நஸ்முதின் ஏற்கனவே சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது பிணையில் வெளியே வந்துள்ளது தெரிய வந்தது.

இது குறித்து மேலும் காவல்துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்கள் கொண்டு வந்தது கள்ள நோட்டு என்பதும் அந்த கள்ள நோட்டுகளை சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் புழக்கத்தில் விட வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் 2 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 20 Aug 2022 3:04 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலைக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...