/* */

தென்காசி மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக தொடங்கியது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், கடையம், வாசுதேவநல்லூர்,கீழப்பாவூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 754 வாக்கு பதிவு மையங்களில் இன்று காலை ஏழு மணியில் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுடைய வாக்கினை பதிவு செய்ய ஆர்வமாக வருகின்றனர்.

குறிப்பாக மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 20பஞ்சாயத்து, 12ஒன்றிய கவுன்சிலர்கள், 468வார்டு உறுப்பினர், ஒரு மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 117வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கு ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று டிஎஸ்பிக்கள் உள்பட் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசாம்பவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிறப்பு அதிரடிப்படை மற்றும் ரோந்து வாகனங்களில் அதிகளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

Updated On: 6 Oct 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...