/* */

டிராக்டரில் சென்று ஆய்வு மேற்கொண்ட சங்கரன்கோவில் எம்எல்ஏ

குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட ஆலமநாயக்கர்பட்டி கண்மாய் நிறைந்து, உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

HIGHLIGHTS

டிராக்டரில் சென்று ஆய்வு மேற்கொண்ட சங்கரன்கோவில் எம்எல்ஏ
X

டிராக்டரில் சென்று உடைந்த கம்மாயை ஆய்வு செய்த எம்எல்ஏ.

சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததையொட்டி, குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட ஆலமநாயக்கர்பட்டி கண்மாய் நிறைந்து, உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கண்மாய் உடைப்பு சீர் செய்யும் பணியினை அரசு அலுவலர்களை துரிதப்படுத்தி உடனடியாக சீர் செய்யபட்டது.

இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ஒன்றிய செயலாளர் சேர்மதுரை, ஒன்றிய வார்டு கவுன்சிலர் சங்கீதா, கணேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் கனகலட்சுமி ஆகியோரோடு அந்த கண்மாயை டிராக்டரில் சென்று பார்வையிட்டார். மேலும் கரையை வலுப்படுத்துவதற்கு அமைச்சரிடம் கோரிக்கையை சொல்வதாக உறுதியளித்தார். அந்தப் பகுதியை பார்வையிட டிராக்டரை தானே இயக்கி சென்று உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Updated On: 2 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்