புளியங்குடி நகராட்சி ஆணையரை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்
![புளியங்குடி நகராட்சி ஆணையரை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம் புளியங்குடி நகராட்சி ஆணையரை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்](https://www.nativenews.in/h-upload/2021/07/07/1158717-img20210707104259.webp)
புளியங்குடி நகராட்சி ஆணையரை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்
புளியங்குடி பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை அப்புறப்படுத்த உத்தரவிட்ட நகராட்சி ஆணையர், மற்றும் திமுக பிரமுகரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் அருகே உள்ள சிந்தாமணி 6 வது வார்டு தெருவில் உள்ள பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காகவும், அத்தெருவின் முகப்பு மற்றும் குடிநீர்தொட்டி என ஆறு இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமிராவை அப்பகுதி மக்களின் சொந்த பணத்தில் பொருத்தியுள்ளனர்.
இதனை அப்பகுதியில் உள்ள திமுக பிரமுகர் தூண்டுதலின் பெயரில் ஒருவர் சிசிடிவி கேமராக்களை சில நாட்களுக்கு முன்பு அடித்து நொறுக்கியதாக கூறுகின்றனர். அதையும் அப்பகுதியில் உள்ள மக்கள் பொருட்படுத்தாமல் மீண்டும் புதிய சிசிடிவி கேமிராவை பொறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் புளியங்குடி நகராட்சி ஆணையர் குமார்சிங் அத்தெருவில் உள்ள அனைத்து சிசிடிவி கண்காணிப்புக் கேமிராக்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இன்று புளியங்குடி நகராட்சி ஆணையருக்கு எதிராகவும், மேலும் சிசிடிவி கேமிராவை அடித்துநொறுக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நகராட்சி ஆணையரையும், திமுக பிரமுகரையும் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu