சாலை விபத்தில் மரணமடைந்த அரசு மருத்துவர்களுக்கு அஞ்சலி.

சாலை விபத்தில் மரணமடைந்த அரசு மருத்துவர்களுக்கு அஞ்சலி.
X

மரணமடைந்த அரசு மருத்துவர்களுக்கு அஞ்சலி.

தென்காசி மாவட்டம் திரவியநகர் அருகே நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் சங்கரன் கோவிலை சேர்ந்த சிதம்பர ராஜா மற்றும் ராம்குமார் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் மரணமடைந்தனர். அவர்களுக்கு இன்று சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அவர்களது திருவுருவப் படத்திற்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள், பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!