முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி விழா: சங்கரன்கோவில் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை
சங்கரன்கோவிலில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா மலர் தூவி மரியாதை.
HIGHLIGHTS
சங்கரன்கோவிலில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு சங்கரன்கோவில் சட்டமண்ற உறுப்பினர் ராஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 114 ஜெயந்தி விழா மற்றும் 59 குருபூஜை விழா தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் எதிரே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் திருஉருவ படத்திற்கு சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.