Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு பூங்காெத்து காெடுத்து வரவேற்ற எம்எல்ஏ
சங்கரன்கோவில் நகராட்சி பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
HIGHLIGHTS
சுமார் 500 நாட்களுக்கு பின் பள்ளிக்கு வரும் குழந்தைகளை முதல்வர் தளபதியின் ஆணைக்கிணங்க இன்று சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
கொரோனா ஊரடங்கால் 500நாட்களுக்கு பின்பு இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல் அறிவித்திருந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
இதில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு குழந்தைகளை வரவேற்ற நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.