/* */

சங்கரன்கோவில் அருகே காணாமல் போன மூதாட்டி குளக்கரையில் சடலமாக மீட்பு

சங்கரன்கோவில் அருகே காணாமல் போன மூதாட்டி குளக்கரையில் சடலமாக மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே காணாமல் போன மூதாட்டி குளக்கரையில் சடலமாக மீட்பு
X

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி புஷ்பம்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி புஷ்பம் (80). புஷ்பம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக சின்ன கோவிலா குளம் காவல் நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்திருந்தார்.

கடந்த 20 நாட்களாக காணாமல் போனவரை தேடி வந்த நிலையில், இன்று சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளம் குளக்கரையில் பெண் சடலம் கிடப்பதாக குருவிகுளம் காவல்துறைனருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.

பின்பு சுற்று பகுதியில் காணாமல் போனதாக உள்ளபட்டியலை எடுத்து விசாரணை செய்ததனர். இதில் புஷ்பத்தின் மகனிடம் தெரியபபடுதினர். அவர் அடையாளம் காட்டியதையடுத்து இறந்திருப்பது புஸ்பம் தான் எனவும், குளக்கரையில் நடந்து சென்றபோது கரையில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனை எடுத்துக் குருவிகுளம் காவல்துறையினர் உடலின் மாதிரிகளை மரபணு சோதனைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Jun 2023 1:42 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...