சங்கரன்கோவில் பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சங்கரன்கோவில் பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

 சங்கரன்கோவில் பகுதியில் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மாவட்ட எம்.ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன்.

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் நிர்வாகிகள் அதிமுக கட்சி கொடி ஏற்றி வைத்தனர்

சங்கரன்கோவிலில் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாவட்ட எம்.ஜிஆர் மன்ற செயலாளரும் நகர்மன்றத் துணைத் தலைவருமான கண்ணன் என்ற ராஜூ தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களோடு, எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு தேங்காய் உடைத்து, சூடம், பத்தி ஏற்றி மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இதையொட்டி அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் அதிமுக கட்சி கொடி ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் பரமசிவன், ராமர், முத்துலட்சுமி, மாரிச்சாமி, தமிழ்செல்வன், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் காந்தி குமார், உள்ளிட்ட லட்சுமணன், கார்த்தி, கபில் சின்னராஜ், ரவிசங்கர், மாரியப்பன,சொக்கலிங்கம் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
ai healthcare products