சங்கரன்கோவில்: கிணற்றில் விழுந்த நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

சங்கரன்கோவில்: கிணற்றில் விழுந்த நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
X
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாயை தீயணைப்புத் துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீராணபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் நாய் தவறிவிழுந்து தத்தளித்துக் கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

Tags

Next Story
ai marketing future