/* */

ஈரோடு - திருநெல்வேலி ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் - ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

தென்காசி வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு - திருநெல்வேலி ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் - ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
X

பட விளக்கம்: ரயில் கோப்பு படம்.

தென்காசி வழியாக ஈரோடு - நெல்லை ரெயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும்- ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

நெல்லையில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் நெல்லை - ஈரோடு ரெயிலை அம்பை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அம்பை வழியாக செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை ரெயிலை இயக்கியதற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையில் ரெயில்வேக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தாம்பரம் - செங்கோட்டை ரெயில் அம்பை, சேரன்மகாதேவி பகுதி மக்களுக்கு முதன்முறையாக சென்னைக்கு செல்ல நேரடி வசதி கிடைத்துள்ளது.மேலும் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கடையம், பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், நெல்லையில் புறப்பட்டு மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் வண்டி எண் 16846 நெல்லை - ஈரோடு ரெயிலை அம்பை, தென்காசி வழியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும் இன்று அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தார்.

Updated On: 25 Jun 2023 7:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்