சங்கரன்கோவிலில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக நிர்வாகி பரிசளிப்பு

சங்கரன்கோவிலில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் காேப்பையை வழங்கினார்.
சங்கரன்கோவில் நகரில் காந்திநகர் கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் பரிசு பொருட்களை வழங்கினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காந்திநகர் கிரிக்கெட் கிளப் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று காந்தி நகர் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களையும் கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக. கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu