சின்னகோவிலாங்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS காவலர்களின் உடைபொருட்கள் மற்றும் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தார்.
பின்னர் காவல் துறையினருக்கு தங்கள் பணியில் பொறுப்புடனும் நேர்மையுடனும் திறம்பட செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் மீனாட்சி நாதன், சார்பு ஆய்வாளர் ராம கணேசன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu