சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியர்: செய்தியாளரை தடுத்த தபேதாரால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியர்: செய்தியாளரை தடுத்த தபேதாரால் பரபரப்பு
X

சங்கரன்கோவில் அருகே ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சிரை வீடியோ எடுக்க சென்ற செய்தியாளரை எடுக்க கூடாது என தடுத்து கேமரா முன் நின்ற தபேதார் கார்த்திக்.

சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியரை வீடியோ எடுக்க சென்ற செய்தியாளரை தடுத்து கேமரா முன் நின்ற தபேதார் கார்த்திக்.

சங்கரன்கோவில் அருகே ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சிரை வீடியோ எடுக்க சென்ற செய்தியாளரை எடுக்க கூடாது என தடுத்து கேமரா முன் நின்ற தபேதார் கார்த்திக். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதனை படம் எடுக்க சென்ற செய்தியாளரை படம் எடுக்க கூடாது என கூறிய தபேதார் கார்த்திக் என்பவர் கேமரா முன்று நின்று மறைத்து கொண்டார்.

பின்னர் அருகில் நின்ற பொதுமக்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கூறியதையும் பொருட்படுத்தாமல் தபேதார் கார்த்திக் ஆய்வு செய்ததை எடுக்கவிடாமல் தடுத்து நின்றார். அதனையும் பொருட்படுத்தாமல் செய்தியாளர் அதனையும் வீடியோ எடுத்த சம்பவம் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?