/* */

திருவேங்கடம் அருகே இருதரப்பினரிடையே மோதல்: 8 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது

திருவேங்கடம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 8 பேர் மீது வழக்குபதிவு: 4 பேர் கைது

HIGHLIGHTS

திருவேங்கடம் அருகே இருதரப்பினரிடையே மோதல்: 8 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது
X

திருவேங்கடம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 8 பேர் மீது வழக்குபதிவு: 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கீழதிருவேங்கடத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கருப்பசாமி (47) கருப்பசாமி அப்பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெங்கடேஷ் (20), மனைவி வள்ளி, தாயார் கருப்பாயியம்மாள். இதே பகுதியை சேர்ந்தவர் சண்முககனி. இவரது மகன்கள் கபில் (22), பொன்கணேஷ் (22) மனைவி ராஜேஸ்வரி, மற்றும் 18 வயது மகள். இந்நிலையில் கபில், வெங்கடேஷிடம் குடிப்பதற்கு அழைத்துள்ளார். இதற்கு வெங்கடேஷ் மறுக்கவே, கபில் வெங்கடேசை தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளார்.

இதனை தட்டி கேட்ட வெங்கடேசின் தந்தை கருப்பசாமியை கபில், அவரது சகோதரர் பொன்கணேஷ், தாயார் ராஜேஸ்வரி மற்றும் 18 வயது சகோதரி ஆகியோர் தாக்கியுள்ளனர். அதற்கு கபிலை, கருப்பசாமி, அவரது மகன் வெங்கடேஷ், மனைவி வள்ளி, தாயார் கருப்பாயியம்மாள் ஆகியோர் தாக்கியுள்ளனர். இது குறித்த இருதரப்பு புகாரின்பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குபதிவு செய்து கபில், பொன்கணேஷ், கருப்பசாமி, வெங்கடேஷ் ஆகியோர்களை கைது செய்தனர்.

Updated On: 30 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு