/* */

சங்கரன்கோவில் அருகே சிசிடிவி கேமரா செயலிழப்பு: இரு பிரிவினர் மோதலால் போலீசார் குவிப்பு

சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தில் கண்காணிப்பு கேமரா செயல்படாததால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே சிசிடிவி கேமரா செயலிழப்பு: இரு பிரிவினர் மோதலால் போலீசார் குவிப்பு
X

சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தில் கண்காணிப்பு கேமரா செயல்படாததால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா செயல்படாததால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்கோட்டூர் கிராமத்தில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வாக்களித்தவர்கள் வெளியே செல்லாமல் அங்கேயே இருந்ததாலும் மக்கள் கூட்டம் காரணமாகவும் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

கண்காணிப்பு கேமரா செயல்படாததற்கு ஒரு பிரிவினரே காரணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நிலைமையை வாக்குச்சாவடி அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழ்நிலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த 100-ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்களித்த பின்பும் அங்கேயே சுற்றி திரிந்தவர்களை வெளியில் அனுப்பியும், மோதலுக்கு காரணமான இரண்டு பிரிவினரையும் உடனடியாக வாக்களிக்க செய்து வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியே அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 9 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை