உள்ளாட்சித் தேர்தல்: சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல்: சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
X
உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக, சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சிக்கு, உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்ற நிலை உள்ளது. இதை தொடர்ந்து சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில், முன்னாள் நகரமன்ற தலைவரும், அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளருமான கண்ணன் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அதிமுக நகர செயலாளர் ஆறுமுகம், தொகுதி அதிமுக செயலாளர் வேலுசாமி, சௌந்தர் என்ற சாகுல் ஹமீது நகர இளைஞரணி பாசறை செயலாளர் நிவாஸ், அதிமுக பேச்சாளர் லட்சுமணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் செயல்பாடு, உத்திகள், பிரசார வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture