சங்கரன்கோவிலில் தீவிர வாக்கு சேகரிப்பு: அதிமுகவினர் சுறுசுறுப்பு

சங்கரன்கோவிலில் தீவிர வாக்கு சேகரிப்பு: அதிமுகவினர் சுறுசுறுப்பு
X

அதிமுக முன்னாள் நகர் மன்றத்தலைவர் கண்ணன் தலைமையில், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில், தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிமுகவினர்.

சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியை அதிமுகவினர் தொடங்கியுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், அதிமுகவினர் வாக்கு சேகரிப்பை தொடங்கிவிட்டனர். அதிமுக முன்னாள் நகர் மன்றத்தலைவர் கண்ணன் தலைமையில் நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சமுதாயத்தலைவர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்களுக்கு சால்வை அணிவித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நகர்ப்பகுதிகளில் உள்ள முப்பது வார்டுகளுக்கு, வேட்பாளர்கள் அதிமுக சார்பில் ஏற்கனவே தேர்தெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அவரவர் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture