/* */

பீடி கம்பெனி மூடுவதற்கு தொழிலாளர்கள் கண்டனம்

பீடி கம்பெனி மூடுவதற்கு தொழிலாளர்கள் கண்டனம்
X

செங்கோட்டை அருகே தனியார் பீடி கம்பெனி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மூடுவதை கண்டித்து பீடி தொழிலாளர்கள் சங்கத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரத்தில் தனியார் பீடி கம்பெனியை சேர்ந்த தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்பு கூட்டம் கண்மணி தலைமையில் நடைபெற்றது.சிஐடியூ தென்காசி மாவட்ட செயலாளர் வேல்முருகன், பீடி சங்க மாவட்ட பொருளாளர் ஆரியமுல்லை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் தனியார் பீடி கம்பெனியை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், தொழிலாளர் துறை முன் அனுமதி பெறாமல் திடீரென ஏப்ரல் இறுதியில் மூடிட முடிவு செய்வதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிப்பதோடு தமிழக அரசு தொழிலாளர் துறை இதில் தலையிட்டு தொடர்ந்து அய்யாபுரத்தில் பீடி கம்பெனி செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும், 2021 ஏப்ரல் 1 முதல் தமிழக அரசு பீடி தொழிலாளர்களுக்கு உயர்த்திய பஞ்ச படி ரூ. 9.37 பை அனைத்து பீடி கம்பெனிகளும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 16 April 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்