/* */

மேக்கரையில் சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செங்கோட்டை அருகே மேக்கரையில் சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

மேக்கரையில் சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

மேக்கரை கோட்டை மலையில் அமைந்துள்ள சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள மேக்கரை கோட்டை மலையில் அமைந்துள்ள சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை பூர்த்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் 9 வித யாகங்கள் நடத்தப்பட்டு 12 அடி உயரத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வனபத்ரகாளி, வன சித்தி விநாயகர், வனச்சுடலை மாடன், வனசித்த சிவலிங்கம் ஆகிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிவாச்சாரியார்கள் தம்பிரான், பாபு ஆகியோர் கும்பநீர் ஊற்றி சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். வனபத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து காளிப்படையல் வைத்து உச்சிகால பூஜை நடந்தது. சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் நிறுவனர் மற்றும் அறங்காவலர் மோனிஷ் மத்தியாஸ், டிரஸ்டி அனிலா மோனிஷ் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 5 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  5. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  9. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  10. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து