செங்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் தர்ணா

செங்கோட்டை நகராட்சியில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளா்கள் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் சுமார் 58பேர் தற்காலிக துாய்மை பணியாளா்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவர்களுக்கு ரூ.422.50 ஊதியமாக வழங்கிட வேண்டும். ஆளுக்கு 100கிலோ கழிவு எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவது நிறுத்திடவும், பெண்கள், ஆண்களையும் அவதுாறாக பேசியும் வேலையைவிட்டு நீக்கிவிடுவேன் என பேசியும், மிரட்டியும் வருவதை கண்டித்தும், சீருடை மற்றும் கையுறை, காலணி வழங்கிட வேண்டும். அரைநாள் வேலை எனச்சொல்லி முழுநாள் வேலை செய்ய சொல்வதையும், முழுநாள் வேலை சம்பளம் வழங்கிட வேண்டும்.
கான்ட்ராக்ட் வேலையில் எங்களை அரசு ஊழியா் போல வேலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், வாரம் ஒருநாள் விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்கிடவும், வேலைக்கான உபகரணங்கள் வழங்கிடவும், பிஎப், இஎஸ்ஐ போன்றவை பிடித்தம் செய்திட வேண்டும். கொரோனா நிவாரண நிதியாக ரூ.15000, வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனா்.
இதனையடுத்து செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் நித்யா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் பேச்சுவார்த்தை ஒப்பந்ததாரரையும் வைத்துக்கொண்டு வரும் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுமென முடிவு செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்பவதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu