Begin typing your search above and press return to search.
தென்காசியில் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
தென்காசியில் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் உள்ள காவல் துறையினரின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜின் ஏற்பாட்டில் அகர்வால் மருத்துவமனையின் மருத்துவர் பிந்து தலைமையிலான மருத்துவ குழுவின் உதவியுடன் இலத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த கண் பரிசோதனை முகாமில் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் என சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.