தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் 14 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் ஸ்ரீநாத் ராமன்.
தென்காசியை அடுத்துள்ள கணக்கப்பிள்ளைவலசை பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் ஸ்ரீநாத் ராமன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு 14 - வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வருகிற 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிழமை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் 01.09.2008 க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக தென்காசி மாவட்ட வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், வரும்போது வெள்ளை நிற சீருடையுடன், ஷூ அணிந்து வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
21-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ள வீரர்களின் தேர்வுக்கு வருவோர் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் எனவும், நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது எனவும் குறிப்பிட்டார். மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களின் திறனை காண்பித்து இந்த கிரிக்கெட் வீரர்களின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தென்காசி மாவட்ட கிரிக்கெட அசோசியேசன் செயலர் ஸ்ரீராம் ராமன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu