/* */

தமிழக - கேரள எல்லையில் 2வது நாளாக தீவிர கண்காணிப்பு

தமிழக - கேரள எல்லையில் சோதனை மேற் கொண்டு வருகின்றனர். தமிழகம் வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது

HIGHLIGHTS

தமிழக - கேரள எல்லையில் 2வது நாளாக தீவிர கண்காணிப்பு
X

கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு தீவிரமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கேரளாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் திடீரென சோதனையை அதிகப்படுத்தினர்.


செங்கோட்டை, புளியரை பகுதிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர். தமிழக கேரள வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டன. சுகாதாரத்துறையினர், இரண்டாவது நாளாக புளியரை சோதனை சாவடியில் தீவிர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2.50 கிலோ மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.


இல்லையேல் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்று வேண்டும். இவை இருந்தால் மட்டுமே தமிழகத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லக் கூடியவர்களும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் கேரளாவிற்கு செல்லக்கூடிய அனைத்து நபர்களுக்கும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 20 Aug 2021 3:12 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...