சௌந்தரபாண்டியன் 128வது பிறந்தநாள் விழா: இந்திய நாடார்கள் பேரமைப்பினர் மரியாதை

நீதிக்கட்சித்தலைவர்களிம் ஒருவரான சௌந்தபாண்டியனாரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மரியாதை செய்த இந்திய நாடார்கள் பேரமைப்பினர்
சௌந்தரபாண்டியன் 128-வது பிறந்தநாள் விழா. இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் மாநில துணைத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ் முன்னிலையில் அச்சம் அகற்றிய அண்ணல் பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியனாரின் 128 -ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கடையநல்லூர் அருகே அச்சன்புதூரில் நடைபெற்ற நிகழ்வில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
விவசாயிகளுக்காகவும், சமுதாயத்திற்காகவும் அரும்பாடுபட்டவர். பெரியாரின் தீவிர பற்றாளர். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி உருவாக காரணமானவர். இந்நாளில் அவரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்று இந்து நாடார்கள் பேரமைப்பின் துணைத்தலைவர் லூர்து நாடார் தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu