/* */

தென்காசி அருகே காெலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

தென்காசி அருகே அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைப்பு.

HIGHLIGHTS

தென்காசி அருகே காெலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைரவன் குளத்தில் கருத்தப்பாண்டி (64) என்பவருக்கு சொந்தமான வயலில் அவரும் அவரது மகன் கார்த்திகேயன் (32) என்பவரும் வரப்பு வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த பக்கத்து வயலின் உரிமையாளரான சந்தன பாண்டியன் (40) என்பவர் நீ எப்படி வரப்பை வெட்டலாம் என்று அவதூறான வார்த்தைகளால் பேசி கையில் வைத்திருந்த அரிவாளால் கருத்த பாண்டியனை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கருத்தபாண்டியன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருத்த பாண்டியனின் மகனான கார்த்திகேயன் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜாராம் விசாரணை மேற்கொண்டு மேற்படி சுந்தரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்

Updated On: 16 Oct 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!